மயிலாடுதுறை, ஜூன் 25- மயிலாடுதுறையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் டபிள்யூ.காபிரியேல் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில துணைத்தலைவர் எம்.முருகையன், மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றினர்.
நூறு நாள் வேலையை உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூன் 28 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய கட்டிட நிதி ரூ.20,000 மாநில பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது.